November 8, 2008

நேரம் 4:40 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ - குழுவினர்கள்
ஆண்டு : 1996



இது தாய் பிறந்த தேசம்
நம் தந்தை ஆண்ட தேசம்
இது நாம் வணங்கும் தேசம்
உயிர் நாடி இந்த தேசம்
மண் பெரிதா உயிர் பெரிதா
பதில் தரவா இப்போதே
வா புலியே நம் வாழ்வும் சாவும் யார் வசம்

(வந்தே மாதரம்...)


வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமி சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று
நிலத்தடியில் புதைந்திருக்கும்
பினங்களுக்கும் மனம் இருக்கும்

(வந்தே மாதரம்) ....

தாயோ பத்து மாசம் தான்
அதிகம் சுமந்தது தேசம் தான்
உயிருன் உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால் தேசம் தான்
இந்த புழுதிதான் உடலாச்சு
இந்த காற்று தான் உயி மூச்சு
இன்று இரண்டுமே பரிப்போச்சு
இன்னும் என்னடா வெரும் பேச்சு
கை விலங்கை உடைத்திடடா
எரிமலையே எழுந்திடடா

(வந்தே மாதரம்) ....

0 மறுமொழிகள்: