November 4, 2008

நேரம் 8:54 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம்: சொல்லாமலே
இசை:பாபி
பாடியவர்கள்: ஹரிஹரன் - சித்ரா
ஆண்டு: 1998




ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே
(சொல்லாதே)
ஆண்: மெளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்
பெண்: காதல் மொழி வாங்க வந்தாய் நீயும் சொல்ல மாட்டாய்
ஆண்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
பெண்: மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
ஆண்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்
பெண்: காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்

(சொல்லாதே)

பெண்: காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
ஆண்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்
பெண: நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
ஆண்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
பெண: சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
ஆண: என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ

(சொல்லாதே)

0 மறுமொழிகள்: