November 8, 2008

நேரம் 2:47 PM வகை வரிகள் அறிவுமதி

திரைப்படம் : சிறைச்சாலை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா
ஆண்டு : 1996



பெண்: ஆலோலங்கிளி தோப்பிலே

தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி
விளையாடிடக் கூடாதடி கூட்டுக்காரி

ஆண்: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

பெண்: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் அய்யோ அய்யயோ!!!
ஆண்: செல்லக்கிளி சிந்து படிக்கும் அய்யோ அய்யயோ!!

(ஆலோலங்கிளி தோப்பிலே)

ஆண்: கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ
பெண்: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ
ஆண்: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலா பெண்ணே
பெண்: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன் ஊஞ்சல் ஆடி வா
ஆண்: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

(ஆலோலங்கிளி)

பெண்: கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
ஆண்: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்க போகலாமோ
பெண்: பூ விழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
ஆண்: நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய் தானோ
பெண்: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா புதுக் காதல் குறுந்தொகையா

(ஆலோலங்கிளி)

0 மறுமொழிகள்: